ராஜபாளையம், ஏப். 1: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலைநிகழ்ச்சிகளை கலெக்டர் கண்ணன் துவக்கி வைத்தார். ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்ட கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கண்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணியில் நமது வாக்களிப்பது நமது கடமை, நமது வாக்கு நமது உரிமை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தளவாய்புரம் முதல் முக்கிய வீதிகள் வழியாக முகவூர் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.