×

சாலையோரங்களில் உள்ளவர்களுக்கு வீடு: எழும்பூர் திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் வாக்குறுதி

சென்னை, ஏப்.1: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் நேற்று காலை எழும்பூர் பகுதியின் அல்லிக்குளம் அருகே வாக்கு சேகரித்தார்.  அப்போது அவரை மக்கள் வரவேற்றனர். அப்போது அவர்கள், “இந்த பகுதியில் பலர் நலமற்று வீடு இல்லாமல் சாலையோரங்களிலும், குடிசைகளிலும்  வசித்து வருகிறோம். காலம் காலமாக வசிக்கும் எங்களுக்கு இதுவரை வீடு இல்லை,” என்று கூறினர். அதற்கு திமுக வேட்பாளர் இ.பரந்தாமன், “கண்டிப்பாக எனது வாக்குறுதியிலேயே அது உள்ளது. அதை நிச்சயம் செய்வேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின், பல்வேறு நல திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக நமது சென்னை மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதில், அனைவருக்கும் வீடு, கொரோனா நிதி உதவியாக ₹4 ஆயிரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 என பல்வேறு நலதிட்டங்களை அறிவித்துள்ளார். எனவே கவலை வேண்டாம். எந்த நலதிட்டங்களும், வேலை வாய்ப்பு இல்லாமல் அவதியடைந்து வந்த நமது தொகுதிக்கு நல்லது நடக்க மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். தொகுதிக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் என்னிடம் கேட்காமலேயே நான் செய்வேன். நல்லாட்சி அமைய திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்,” என்று வாக்கு சேகரித்தார். மேலும், நேற்று மாலை ஹாரிங்டன் சாலை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுப வீரபாண்டியன் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

Tags : Egmore DMK ,E. Barandaman ,
× RELATED பொதுமக்கள் வசதிக்காக சூளை வழியாக...