×

ராஜபாளையம் அருகே சூறாவளி காற்றால் வாழைகள் சேதம்

ராஜபாளையம், ஏப். 1: ராஜபாளையம் அருகே கிழவிகுளம் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் 8 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்தன.ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் பகுதியில் 7 ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலையில் அடித்த சூறாவளி காற்றில் எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் சூறாவளி காற்றால் சேதமடைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் சந்திரசேகர், மருததேவர், சங்கிலி பூதத்தான் , சுப்புராஜ், ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு வேளாண்மைத்துறை சார்பில் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!