×

தேவதானப்பட்டி அருகே டூவீலர்கள் மோதல்: முதியவர் பலி 2 பேர் படுகாயம்

தேவதானப்பட்டி, ஏப். 1: தேவதானப்பட்டி அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை நடுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று பெரியகுளம் அருகேயுள்ள காமாட்சிபுரத்திற்கு உறவினர் வீட்டு விஷேசத்திற்கு டூவிலரில் வந்துள்ளனர். விஷேசத்தை முடித்து விட்டு பொன்ராம், பாண்டி ஆகியோர் டூவிலரில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.  தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி பிரிவில் டூவிலரை திருப்பும் போது பின்னால் வந்த காமாட்சிபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (21) என்பவரது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாண்டி (55) சம்பவ இடத்திலேயே பலியானார்.

பொன்ராம், தினேஷ்குமார் பலத்த காயமடைந்தனர். தினேஷ்குமாருடன் டூவிலரில் வந்த அவரது உறவினர் சுமதி மற்றும் அவரது 3 குழந்தைகள் லேசான காயமடைந்தனர். பொன்ராம், தினேஷ்குமார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். லேசான காயமடைந்த சுமதி, அவரது 3 குழந்தைகள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Devadanapatti ,
× RELATED வனப்பகுதியில் தீவைத்தவர்கள் கைது