×

ஆண்டிபட்டி அருகே போதையில் மனைவியை தாக்கிய கணவன் கைது

ஆண்டிபட்டி, ஏப். 1: ஆண்டிபட்டி அருகே மது போதையில் மனைவியை கல்லால் தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி பகுதி நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவரது மனைவி பஞ்சு (32). இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி பஞ்சுவிடம் சண்டை போட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த ரமேஷ் பஞ்சுவை கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த பஞ்சுவை மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பஞ்சு அளித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீசார் ரமேஷை கைது செய்தனர்.


Tags : Andipatti ,
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...