×

திருப்புத்தூர் தொகுதியை வளமான தொகுதியாக மாற்றி அமைப்பேன் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு

திருப்புத்தூர், ஏப்.1: திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியை வளமான தொகுதியாக மாற்றி ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக கொண்டு வர முயற்சிப்பேன் என்று திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ உறுதியளித்தார்.திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ நேற்றுஎஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். இதில் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘திருப்புத்தூர் தொகுதியில் தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற செய்த அனைத்து மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியை வளமான தொகுதியாக மாற்றி ஒரு முன்மாதிரி சட்டமன்ற தொகுதியாக கொண்டு வர முயற்சிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

மேலும் தமிழகம் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்காத மாநிலமாக, விலைவாசிகளை கட்டுப்படுத்த முடியாத மாநிலமாக இருந்து வருகிறது. மேலும் 10 ஆண்டு காலம் ஆட்சியில் செய்யாததை தற்போது செய்யப்போவதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆகவே உங்களுக்கு உழைக்கின்ற ஒரு ஊழியனாக தொண்டு செய்கின்ற எனக்கு தொடர்ந்து மூன்று முறை வாய்ப்பு தந்த நீங்கள், இப்பொழுது நான்காவது முறையும், உங்களை நாடி வந்த என்னை, நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்திட வேண்டும்’’ என்றார்.

Tags : DMK ,KR Periyakaruppan ,MLA ,Tiruputhur ,
× RELATED முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை