×

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை டிடிவி தினகரன் உறுதி

தொண்டி, ஏப்.1: கச்சத்தீவை மீட்டு எடுப்பதன் மூலம் மீனவர்களின் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, திருவாடானை தொகுதி அமமுக வேட்பாளரை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் டிடிவி.தினகரன் தெரிவித்தார். திருவாடனை தொகுதி அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்தை ஆதரித்து, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.எஸ்.மங்கலத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திருவாடனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை போக்க கடந்த காலத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  கிராம பகுதிகளில் இருந்து நகரங்கள் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கிறார்கள்.

இதை தவிர்த்து உள்ளூரிலேயே வேலைவாய்ப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நலன் காக்க தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். கச்சத்தீவை மீட்டு எடுப்பதன் மூலம் மீனவர்களின் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் தொகை முழுவதும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய பிரஷர் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Tags : DTV ,Dhinakaran ,Kachchhati ,
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!