×

பள்ளிவாசல்களில் கொரோனா பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் காஜிகள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்

கீழக்கரை, ஏப்.1: காஜிகளின் கூட்டமைப்பு கூட்டம் ஏர்வாடியில் கூட்டமைப்பு  தலைவர் சலாஹூதீன் தலைமையில்  நடைபெற்றது. செயலாளர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார்.கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் ரமலான் பிறை அறிவிப்பு துரிதமாக மக்களுக்கு சென்றடைவதற்கு வசதியாக பிறை பார்த்தவர்கள் உடனடியாக அந்தந்த மாவட்ட அரசு காஜிகளை தொடர்பு கொள்ள வேண்டும் உட்பட   பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.  

தலைவராக ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக முஜிபுர் ரகுமான், பொருளாளராக முகம்மது கஸ்ஸாலி, ஆலோசகர்களாக நூருல் அமீன், கிபாயத்துல்லாஹ், அபுசாலிஹ், துணைத் தலைவராக முகம்மது அலி, அப்துர் ரஹீம், துணைச் செயலாளராக பஜ்லே கரீம், அப்துல் அஹது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு காஜிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Ghazi Federation ,
× RELATED மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை