×

குன்றத்தில் திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பரங்குன்றம், ஏப்.1: முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முதல்படை வீடான திருபரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. முன்னதாக நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருப்பரங்குன்றம்ே வந்தடைந்தனர்.

இன்று காலை சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து மணக்கோலத்தில் தெய்வானையுடன் குளக்கரையில் பெற்றோர்
களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து சுவாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருளி கண்ணூஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து கோயில் ஆறுகால் பீடத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு திருமண சம்பிரதாயங்கள் நடைபெற்றது. யாகசாலை பூஜை முடிந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tirukkalyana ceremony ,Kunrat ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...