மதுரை, ஏப். 1: மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 28ம் தேதி பங்குனி உத்திரமும், 29ம் தேதி சூரசம்காரமும் நடைபெற்றது. நேற்று 11.50 மணியளவில் கோயிலுக்குள் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. இதற்காக மதுரை மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஷ்வரர் திருப்பரங்குன்றம் சென்றதால் கோயிலில் மீனாட்சி கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது.