×

கொடைக்கானல் பேத்துப்பாறையில் பொது பாதையை மீட்க கோரி மனு

கொடைக்கானல், ஏப். 1: கொடைக்கானல் அருகேயுள்ளது பேத்துப்பாறை கிராமம். இப்பகுதியில் வயல்வெளிக்கு செல்லும் பொது பாதையை தனியார் சிலர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பொது பாதையில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக இப்பகுதி விவசாயிகள் நேற்று கொடைக்கானல் ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ‘பேத்துப்பாறையில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள பொது பாதையை மீட்டு விவசாயிகள் எளிதில் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : Kodaikanal Pethuparai ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு