நத்தம், ஏப். 1: நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ நேற்று அய்யாபட்டி, காந்திநகர், முஸ்லீம் தெரு, கல்வேலிபட்டி, கோவில்பட்டி, மீனாட்சிபுரம், அண்ணாநகர், அசோக்நகர் உள்பட பல இடங்ளில் வாக்கு சேகரித்தார். அப்போது ஆண்டிஅம்பலம் பேசியதாவது: நத்தம் பேரூராட்சி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மின்மயானம் திமுக ஆட்சி அமைந்ததும் ஏற்படுத்தி தரப்படும். காந்திஜி பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்தர இடம் ஏற்படுத்த தரப்படும். நத்தத்தில் நலிவடைந்த நிலையில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை உற்பத்தியை பெருக்கவும், நவீன முறையில் மேம்படுத்தி அதற்கான ஜவுளி பூங்கா ஏற்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்காக அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வரப்படும் இதேபோல் செந்துறை பகுதி மக்களின் நலன் கருதி அங்கு புதிய காவல்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அதற்கு வரும் 6ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்’ என்றார். பிரசாரத்தில் தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினரும்,மாவட்ட கவுன்சிலருமான விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், நகர செயலாளர் முத்துக்குமாரசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.