×

தேர்தல் பணியில் முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. வரும் சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு செல்ல விருப்பமும் உடல் திடகாத்திரமும் உள்ள 70 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரை அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன்  காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து  https://bit.ly/Details of Retired Personnel reported for TNAE 2021 என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதுபோல் பணிபுரிய விருப்ப மனு அளிக்கும் அனைவருக்கும் எஸ்பி மூலம் தபால் ஓட்டுக்கு வழிவகை செய்யப்படும். மேலும், தேர்தல் பணி ஆட்சேர்ப்பு நிமித்தமாக விடுமுறை நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் அலுவலகம் இயங்கும் என்பதால் முன்னாள் படைவீரர்கள் அனைவரும் அந்த நாட்களிலும் அலுவலக நேரத்தில் (காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை) தேர்தல் பணி விருப்ப விண்ணப்பத்தினை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அவர்களை 044  2226 2023 என்ற எண்ணில் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...