×

ஓசூர் அருகே காரில் கொண்டு சென்ற ₹1 லட்சம் பறிமுதல்

ஓசூர், ஏப்.1:ஓசூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்து, தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பாகலூர் அருகே உள்ள சம்பங்கிரி பார்டர் பகுதியில், அதிகாரி கீதாலட்சுமி தலைமையில் எஸ்ஐக்கள் சத்யா, ராஜேந்திரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து ரமேஷ் என்பவர் பாகலூர் நோக்கி காரில் வந்தார். அவரது காரை நிறுத்தி சோதனையிட்ட போது, ஆவணங்கள் இன்றி ₹1 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மூலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...