×

தர்மபுரி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர்

தர்மபுரி, ஏப்.1: தர்மபுரி அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், மாதையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி ஹரிபிரியதர்ஷனி(24). கடந்த 29ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை, அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் வீட்டில் நுழைந்து கட்டிப்பிடித்துள்ளார். இதுகுறித்து, ஹரிபிரியதர்ஷினி தர்மபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்தோஷ்குமார்(27) ஆயுதப்படை பிரிவில் ஓட்டுநராக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்