×

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

காரிமங்கலம், ஏப்.1: தர்மபுரி மாவட்டம் செட்டிகரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17வயது மகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர் முக்குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் சிறு வயதில் இருந்து தங்கி படித்தார். தற்போது காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படிக்கிறார். கடந்த 26ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி, பள்ளி முடிந்து வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர்கள் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.அதன் ேபரில் வழக்குப்பதிவு செய்து தீவிராமக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தேவர் முக்குளத்தை சேர்ந்த சிவா என்பவரது மகன் அஜித்குமார்(23) என்பவர் மாணவியை அழைத்துச் சென்று, மூன்று நாட்கள் தனிமையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தர்மபுரி சிறையில் அடைத்தனர். மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Valipar ,Karimangalam ,
× RELATED அரசு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை