×

வியாபாரியை மிரட்டிய இரு வாலிபர்கள் கைது க

டையம், ஏப். 1:  கடையம்- ராமநதி அணை சாலையில் உள்ள சூச்சமுடையார் சாஸ்தா கோயில் பகுதியில் பங்குனி உத்திரத்தையொட்டி ஆசீர்வாதபுரம் தோரணமலை பகுதியைச் சே்ர்ந்த தாசன்பிரவீன் (25) என்பவர் பஞ்சுமிட்டாய் கடை அமைத்திருந்தார். அங்கு வந்த வல்லத்தை சேர்ந்த  சுரேஷ் (28), கண்ணன் (36) ஆகிய இருவரும் பஞ்சு மிட்டாய் வாங்கினர். இதற்கான பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், தாசன் பிரவீனை தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்தனராம். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கடையம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு