×

இ-பாஸ் கட்டாயம் என்பதால் சோலையார் அணை செக்போஸ்ட்டில் தீவிர கண்காணிப்பு

வால்பாறை, மார்ச் 31: வால்பாறை சோலையார் அணை சோதனைச்சாவடியில் கேரள பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்பதாலும், தேர்தல் நடத்தை வாகன சோதனை கட்டாயம் என்பதாலும் தீவிர வாகன சோதனை மற்றும் கொரோனா கண்காணிப்பு தொடர்கிறது. வால்பாறை அடுத்த சோலையார் அணையில் உள்ள தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடி அமைந்து உள்ளது. தற்போது கொரோனா தொற்று காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்காக இ-பாஸ் கட்டயாம் என்பதால் அங்கு போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் முகாம் அமைத்து பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர்.  மேலும் இ-பாஸ் உடன் கேரளா நபர்கள் வால்பாறைக்குள் வந்தல் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கபடுகின்றனர். இதற்கிடையே தேர்தல் நடத்தை விதி மீறி பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Solayar Dam ,
× RELATED தேயிலை எஸ்டேட்களில் நீர்சூழ்ந்து...