×

பொட்டல்புதூரில் புகையிலை பொருட்கள் பதுக்கிய மூவர் கைது.

கடையம், மார்ச் 31: பொட்டல்புதூரில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கிய 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கிவைத்து விற்கப்படுவதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  இதையடுத்து எஸ்ஐ முத்துகிருஷ்ணன் தலைமையில் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பொட்டல்புதூரைச் சேர்ந்த செய்யது மசூது மகன் மீரான் மைதீன் என்பவர் வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, அப்துல் லத்தீப், மீரான் மைதீன் ஆகிய மூவர்  மீதும் வழக்குப் பதிந்து கைதுசெய்தனர். அத்துடன் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Pottalputhur ,
× RELATED பொட்டல்புதூரில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்