×

நாரணம்மாள்புரம் பகுதியில் பிரசாரம் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றுவேன் நெல்லை திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் உறுதி

நெல்லை, மார்ச் 31: நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணன் எம்எல்ஏ நேற்று காலை நாரணம்மாள்புரம் பேரூராட்சி பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.  அப்போது அவர் பேசுகையில் ‘‘நாரணம்மாள்புரம் பகுதியில் தட்டுப்பாடின்றி  குடிநீர் கிடைக்கவும், சாலை, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தரவும் உதயசூரியன் சின்னத்திற்கு எனக்கு வாக்களியுங்கள். கலை, அறிவியல் கல்லூரி அமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளில் கொரோனா உதவித்தொகை ரூ.4 ஆயிரம், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி.

நெல்லை தொகுதியில் என்னை மீண்டும் வெற்றி பெறச்  செய்தால் உங்களுக்கான அனைத்து தேவைகளும், அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிபாண்டியன், கே.ஆர்.ராஜூ, பேரூர் செயலாளர்கள் சங்கர்நகர் துரை சுடலைமுத்து, நாரணம்மாள்புரம்  செல்வபாண்டி, மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன்,  வர்த்தக அணி துணை அமைப்பாளர் எல்ஐசி பேச்சிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி  காசிமணி, பேச்சாளர் கவிஞர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் மகாராஜன், வக்கீல்கள் பால் மாயாண்டி, கருணாநிதி, விவசாய  அணி  துணை அமைப்பாளர் உதயமகாலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாமணி, பெரியதுரை,  வித்யா கண்ணன், முருகன், முத்துபாண்டி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Nellai DMK ,ALS ,Lakshmanan ,Naranmalpuram ,
× RELATED இறந்த தாய்க்கு இறுதிச் சடங்கு...