×

கடையநல்லூர் தொகுதி அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் வீதிவீதியாக பிரசாரம்

கடையநல்லூர், மார்ச் 31: கடையநல்லூர் தொகுதி அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் தொகுதி முழுவதும் வீதிவீதியாக சென்று பிரசாரம் ெசய்துவருகிறார். இந்நிலையில் நேற்று தேன்பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட மேக்கரை, திருமலாபுரம், மீனாட்சிபுரம், பெரிய பிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட தேன்பொத்தை, கலங்காத கண்டி, பெரிய பிள்ளை வலசை, ரயில்வே காலனி, வலசை ஊராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம், பிரானூர் ஊராட்சிக்கு உட்பட்ட  ஜமீன் வல்லம், சுமை தீர்ந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட  கொட்டாகுளம், சாம்பவர்வடகரை மற்றும் ஆய்க்குடி பேரூராட்சி பகுதி, கண்ணுபுளிமெட்டு,  செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். செல்லும் இடமெல்லாம் மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் அவர் பேசுகையில் ‘‘ கடையநல்லூர் தொகுதியில் அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். அடவிநயினார் மற்றும் கருப்பாநதி அணைகளை முறையாகத் தூர்வாரி சிமென்ட் வாய்க்கால் அமைத்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

அச்சன்புதூர் பண்பொழி வடகரை பகுதிகளில் தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பேன். கிராமப்புற மக்களின் குறைகளை களைந்திட 10 கிராமங்களுக்கு ஒன்று வீதம் குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும். கடையநல்லூர் தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். பிரசாரத்தில் அமமுக மாவட்டச் செயலாளர் பொய்கை மாரியப்பன், தொகுதி பொறுப்பாளர் பெருமையா பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் தென்காசி வினோத் என்ற ராமச்சந்திர மூர்த்தி, செங்கோட்டை லியாகத் அலி, கடையநல்லூர் பெரியதுரை, ஒன்றிய துணைச்செயலாளர் சிங்கிலிபட்டி மணிகண்டன், கிளைச் செயலாளர் ஜானகிராமன்,  ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் அயூப்கான், அச்சன்புதூர் பேரூர் செயலாளர் திருப்பதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சுரேஷ், மேக்கரை பொறுப்பாளர்கள் அசாருதீன், நாகூர் மைதீன், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் நாகலட்சுமி, ஜெ.பேரவை ஒன்றியச் செயலாளர் குமார், பண்பொழி பேரூர் செயலாளர் பரமசிவம், தேன்பொத்தை ஊராட்சி செயலாளர் சித்திரைக்கனி, மீனாட்சிபுரம் கிளைச் செயலாளர் நேரு, பண்பொழி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் காஜா மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Kadayanallur ,AIADMK ,Ayyathurai Pandian ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது