ஏரல், மார்ச் 31: தாமிரபரணி பாசனத்தில் முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு வெளியிட வலியுறுத்தியும், காலதாமதம் செய்வதை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்கார் சாகுபடிக்கு உடனடியாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
வைகுண்டம் ஒன்றிய தலைவர் பொன்ராஜ் ஆழ்வை ஒன்றிய தலைவர் தேவராம், மாவட்ட துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட உதவி தலைவர் ரவிச்சந்திரன், மாரமங்கலம் சமுத்திரம், கடம்பாகுளம் ஆயக்கட்டு விவசாய சங்கம் ராமச்சந்திரன், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், லெட்சுமிபுரம் ராஜராம், தமிழ்செல்வன், அதிசயபுரம் சிலுவை முத்து, ஏரல் பெஸ்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.