×

பேரளத்தில் ரயில்வே மேம்பால பணிகள் முடிக்க நடவடிக்கை நன்னிலம் திமுக வேட்பாளர் ஜோதிராமன் உறுதி

திருவாரூர், மார்ச் 31: நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோதிராமன் தொகுதிக்குட்பட்ட நன்னிலம் குடவாசல், வலங்கைமான் ஒன்றிய, பேரூராட்சி பகுதிகள் என அனைத்திலும் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று வண்டாம்பாளையம், நீலக்குடி, பண்ணைவிளாகம், சிமிலி, புதுக்குடி, மஞ்சக்குடி, மணப்பறவை, திருக்குடி உட்பட பல்வேறு ஊராட்சி கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி ஏற்படுத்தப்படும்.

குடவாசல் அரசு கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், பேரளத்தில் கிடப்பில் கிடக்கும் ரயில்வே மேம்பால பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். தன்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஒன்றிய செயலாளர்கள் பாலசந்தர், கலியபெருமாள் மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : Nannilam DMK ,Jyothiraman ,Peralam ,
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது