×

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா தொற்று

தஞ்சை, மார்ச் 31:  தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 114 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 108 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். மேலும் 574 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 19636 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 18792 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 270 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Tags : Tanjore district ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...