×

வம்பனில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் மெய்யநாதன் பிரசாரம்

அறந்தாங்கி, மார்ச் 31: ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் கைக்குறிச்சி, வேங்கட குளம், வெண்ணாவல் குடி, பாலையூர், கத்தக்குறிச்சி மற்றும் பல்வேறு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வேட்பாளர் மெய்யநாதன் பேசியதாவது:
மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக அரசு உள்ளவரை ஏழை எளிய மக்கள் பணம் கொடுக்காமல் அரசு வேலையை பெற முடியாது. ஆங்கிலேயர்களிடமிருந்து காங்கிரஸ் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தது. மதவாத அடிப்படையில் மோடி மீண்டும் நாட்டை அடிமையாக்கி விட்டார்.

அதில் அதிமுகவினர் அடிமைகளாக மாட்டிக் கொண்டனர். ஏழை மக்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தற்போது அதில் வேலை செய்யும் ஏழை எளிய மக்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. வேலை செய்யும்போது சிந்திய வியர்வை அடங்குவதற்குள் சம்பளம் வழங்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இப்பகுதியில் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் விரைவில் வம்பனில் தொழில்பேட்டை அமைக்கப்படும். அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை குறைக்கப்படும் என்றார். பிரசாரத்தின் போது காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுப்புராம், திமுக ஒன்றிய செயலாளர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Labour Path ,
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...