×

திருமுல்லைவாயலில் துணைமின் நிலைய பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்: திமுக வேட்பாளர் ஆவடி நாசர் வாக்குறுதி

ஆவடி, மார்ச் 31: ஆவடி தொகுதி திமுக வேட்பாளரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் திருமுல்லைவாயில் 9,12 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது, ஆவடி கிழக்கு நகர செயலாளர் பேபி வி.சேகர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு பெண்கள் மலர்தூவி ஆரத்தி எடுத்தனர்.  அப்போது, வேட்பாளர் ஆவடி நாசர் பேசியதாவது, “திருமுல்லைவாயலில் அமைக்கப்பட்டு வரும் துணைமின் நிலையம் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அரபாத் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துவேன். மேலும்,  அங்குள்ள கரைகளை சீர்ப்படுத்தி நடைபாதை அமைத்துக் கொடுப்பேன். இளைஞர்களுக்கு நவீன விளையாட்டு அரங்கம் அமைப்பேன்.  திருமுல்லைவாயலில் உள்ள அண்ணா, பெரியார் பூங்காக்களை சீரமைப்பேன்,” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பில் திமுக மாநில மாணவரணி இணை செயலாளர் பூவை ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.ரமேஷ், மதிமுக தேர்தல் பணிச்செயலாளர் வக்கீல் ஆவடி அந்திரிதாஸ், ஆவடி மாநகர காங்கிரஸ் தலைவர்கள் இ.யுவராஜ், ஏ.ராஜசேகர், விடுதலை சிறுத்தை தொகுதி செயலாளர் மு.ஆதவன், நகர செயலாளர் முல்லை நேதாஜி, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பூபாலன், ராஜன், ஜான், மயில்வாகனன், ராமானுஜம், ஆவடி கிழக்கு நகர திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் சண்.பிரகாஷ், மு.பாலகிருஷ்ணன், கா.குப்புராஜ், ஆர்.சுதாகர், எம்.சரவணன், எம்.நாகஜோதி, வட்டச்செயலாளர்கள் முல்லை ராஜி, உதயகுமார், செல்வம், நாகராஜ், கோபால், குணசேகர், பெருமாள், இளங்கோ, அரி, வெங்கடேசன், சுரேஷ், சிறுபதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், கலந்துகொண்டனர்.

Tags : Thirumullaivayal ,DMK ,Avadi Nasser ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...