×

சிவகாசி காங்கிரஸ் வேட்பாளருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஆதரவு

சிவகாசி, மார்ச் 31:  சிவகாசி சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜி.அசோகன் போட்டியிடுகிறார். இவர் சிவகாசி, திருத்தங்கல் நகரம்- ஒன்றிய பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு பல்வேறு அமைப்பினர், சமுதாய தலைவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். சிவகாசி நகர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளான,  விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் காளிராஜன், சிவகாசி நகர செயலாளர் பழனிவேல், சிவகாசி ஒன்றிய இணை செயலாளர் கண்ணன், விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கட்பிரபு  ஆகியோர் நேற்று அசோகனை சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.

பின்னர் வேட்பாளர் ஜி.அசாகன் பேசுகையில், ‘சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் நலிவடைந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. சிவகாசி, திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் பணிகள் 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. சிவகாசி பகுதியில் சுற்றுவட்ட சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. நான் தேர்தலில் வெற்றி பெற்றால் பட்டாசு தொழில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். ரயில்வே மேம்பாலம் அமைக்க முயற்சி செய்வேன். அச்சு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும். சிவகாசி நகரில் அடிப்படை பிரச்னைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’ என்றார்.

Tags : Rajinikanth ,Sivakasi Congress ,
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...