×

ராஜபாளையத்தில் வீதி, வீதியாக சென்று அமைச்சர் வாக்கு சேகரிப்பு

ராஜபாளையம், மார்ச் 31:  ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று இவர் முத்துசாமிபுரம் கிராமத்தில் நாடார், தேவர், சாலியர், தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் உட்பட 9 சமுதாய தலைவர்கள், நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் பல்வேறு கிராமங்களில் சமுதாய தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், வாக்காளர்களை சந்தித்து அமைச்சர் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், ‘விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் உட்பட 7 தொகுதிகளிலும் அதிமுகவிற்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சாத்தூரில் அமமுக வேட்பாளர் ராஜவர்மன்தான் சோழர் பரம்பரை போல் செயல்பட்டு வருகிறார். சாத்தூரில் சீட் கிடைக்கவில்லை என்பதற்காக வேறொரு கட்சிக்கு சென்று விட்டார். என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய போது நான் கட்சியை எதிர்த்து எந்த இடத்திலும் பேச வில்லை. மாறாக தொடர்ந்து கட்சிக்காக உழைத்து கொண்டுதான் இருந்தேன். ஆகையால்தான் மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுத்தனர். 14 வயதில் 9ம் வகுப்பு படிக்கும்போது அதிமுக கொடியை கையில் பிடித்த நான், இன்றுவரை அந்த கொடியை விடவில்லை’ என்றார்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!