×

மயிலாடும்பாறையில் பயன்பாடில்லா வேளாண் குடியிருப்பு சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம்

வருசநாடு, மார்ச் 31: மயிலாடும்பாறையில் பயன்பாடில்லா வேளாண் குடியிருப்பு கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. மயிலாடும்பாறை கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்துறை அலுவலர்களுக்கு குடியிருப்பு கட்டப்படத்து. இந்த குடியிருப்பில் நாளடைவில் பயன்பாடில்லாமல் போனது. இதனால், தற்போது சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து கிராமத்தை சேர்ந்த நல்லாள் என்பவர் கூறுகையில், ‘வேளாண்மை குடியிருப்பை மது அருந்தும் கூடாரமாக சமூக விரோதிகள் மாற்றியுள்ளனர். சமூக விரோதச் செயல்களும் நடக்கின்றன. குடியிருப்பை சுற்றிலும் விஷஜந்துகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே, தேனி மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பை சீரமைத்து தோட்டக்கலை வேளாண்மைத்துறை அதிகாரிகள் குடியிருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...