×

வேப்பேரி, சூளை பகுதிகளில்ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

சென்னை: எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் நேற்று காலையில் 58வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்  தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, மாலையில் அவதான பாப்பையா ரோடு, காளத்தியப்பா ரோடு, வடமலை தெரு, வெங்கடாச்சலம் தெரு, வள்ளுவன் தெரு, முத்து தெரு, காரியப்ப தெரு, முக்தால் தெரு, வைகாரன் தெரு, டவுட்டன் தெரு மற்றும் நாராயண குரு சாலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்  

அப்போது, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான அனைவருக்கும் வீடு, பேருந்தில் பயணிக்கும் மகளிருக்கு சலுகைகள், விலையில்லா 6 சிலிண்டர்கள், சூரிய சக்தி சமையல் அடுப்பு, வாஷிங்மிஷன் உள்ளிட்ட வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதிமுக வெற்றி பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதிளை அறிவிக்கப்பட்டவை அனைத்தும் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன். இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் சரியாகவில்லை, வெற்றி பெற்றவுடன் அனைத்தையும் நிறைவேற்றி கொடுப்பேன்,’ என்றார். இதை வரவேற்று அப்பகுதி மக்கள் வாழ்த்து கூறினர்.

Tags : Vaipari ,
× RELATED வேப்பேரி, சிந்தாதிரிப்பேட்டை...