×

வெள்ளநீர் புகுவதை தடுக்க தீர்வு: அசன் மவுலானா பிரசாரம்

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று மாலை 181வது வட்டத்துக்குட்பட்ட சிங்காரவேலன் நகர், மருந்தீஸ்வரர் நகர், திருவான்மியூர் குப்பம், வால்மீகி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அசன் மவுலானாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு ஆதரவு திரட்டினார். மக்கள் மத்தியில் அசன் மவுலான பேசுகையில், ‘வேளச்சேரி மக்களை வெள்ள சேதத்திலிருந்து பாதுகாத்திட மழை நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களிலும், இயற்கை பேரிடர் காலங்களிலும் வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலமையை மாற்றி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொகுதி மக்களுக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரப்படும். கிராம நத்தத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் அடையாறு துரை, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, மகிளா காங்கிரஸ் துணை தலைவி மலர்கொடி, திமுக வட்ட செயலாளர் ஜெயக்குமார், காங்கிரஸ் வட்ட தலைவர் ராஜா, மாவட்ட பிரதிநிதி பாலாஜி, இளைஞரணி வட்ட அமைப்பாளர் திலீப் குமார்,  உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் அவருடன் சென்று ஆதரவு திரட்டினர்.

Tags : Asan Maulana ,
× RELATED 365 நாட்களும் தண்ணீர் நிற்கும்...