×

ஒட்டன்சத்திரம் அருகே வாகன சோதனையில் ரூ.25 லட்சம் சிக்கியது பழநியில் ரூ.52 ஆயிரம் பறிமுதல்

ஒட்டன்சத்திரம், மார்ச் 31:ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட தொப்பம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கார்த்திக் தலைமையில் போலீசார் முருகேசன், மாரியப்பன் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது தாராபுரத்தில் இருந்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த வாகனத்தில் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக ரூ.25 லட்சத்தை கொண்டு சென்றனர். வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த அதிகாரிகள், உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, ஒட்டன்சத்திரம் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் சசியிடம் ஒப்படைத்தனர். அவர் அதை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

ரூ.52,700 பறிமுதல்: பழநி அருகே சாமிநாதபுரம் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்த வயலூர் தனியார் வாகன நிறுவன ஊழியர் முருகானந்தம் (43) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், உரிய ஆவணம் இல்லாமல் அவரிடம் இருந்த ரூ.52 ஆயிரத்து 700ஐ பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் பணத்தை கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Ottanchattiram ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே டச்சு நாணயம் கண்டெடுப்பு