×

பழநி அருகே வாத்தை விழுங்க முயன்ற மலைப்பாம்பு தீயணைப்பு படையினர் பிடித்தனர்

பழநி, மார்ச் 31: பழநி அருகே வாத்தை விழுங்க முயன்ற மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் உயிருடன் பிடித்தனர். பழநி அருகே ஆயக்குடியில் பெரியகுளம் கால்வாய் உள்ளது. இங்கு நேற்று சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வாத்து ஒன்றை விழுங்க முயன்றுள்ளது. இதனை கவனித்த விவசாயிகள் இதுகுறித்து உடனே பழநி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை, அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்