×

கூக்காலில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் உறுதி

கொடைக்கானல், மார்ச் 31: பழநி சட்டமன்ற ெதாகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று கொடைக்கானல் மேல்மலை கிராமமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ‘கூக்கால் கிராமத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். இப்பகுதியில் அதிகளவில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விளைபொருட்களுக்கு ஆதார விலை விவசாயிகளுக்கு ஏற்புடைய வகையில் செய்து தரப்படும். இங்கு நீண்டநாள் பிரச்னையான சாலை வசதி விரைவில் செய்து தரப்படும். இங்குள்ள பள்ளி தரம் உயர்த்தப்படும்’ என்றார். பிரசாரத்தில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், ஒன்றிய துணை தலைவர் முத்துமாரி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ்பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயக்கண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தங்கப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,IP ,Senthilkumar ,Google ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்