கோபால்பட்டி, மார்ச் 31: நத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இவர் நத்தம் சந்தனகருப்பு கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து அவர் வேலம்பட்டி, சேர்வீடு, புதுப்பட்டி, குமரபட்டி, பாதசிறுகுடி, மாம்பட்டி, நடுவனூர், செங்குளம், ஆவிச்சிபட்டி, அப்பாஸ்புரம், மீனாட்சிபுரம், காமராஜ்நகர், அசோக்நகர், கோவில்பட்டி, நத்தம் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். வழிநெடுகிலும் இவருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஆண்டிஅம்பலம் பேசுகையில், ‘என்னை மீண்டும் வெற்றி பெற வைத்தால் தொகுதியின் அனைத்து அடிப்படை தேவைகளும், பிரச்னைகளும் தீர்க்கப்படும்’ என்றார். பிரசாரத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, கணேசன், மாவட்ட பிரதிநிதி அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனியம்மாள், துர்கா, சங்கீதா, நிர்வாகிகள் ராஜகோபால், வக்கீல் சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் தன்ராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.