×

ஆத்தூர், கெங்கவல்லியில் ₹11.17 லட்சம் பறிமுதல்

ஆத்தூர், மார்ச்.31: ஆத்தூர் தனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரசிங்கபுரம் கூட்ரோடு பகுதியில் பறக்கும்படை குழு ராஜேந்திரன் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மினி ஆட்டோவில் வந்த பால் வியாபாரி சதீஷ்குமார் (32) என்பவரிடம் ₹68 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் நிலை கண்காணிப்புக் குழு தங்கராஜ், ஆத்தூர் ஒட்டம்பாறையில் வாகன தணிக்கையின்போது கோயமுத்தூரை சேர்ந்த விஷ்ணுவரதன் (34) என்பவரிடம் இருந்து ₹99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் இடையப்பட்டி வில்லனூர் சோதனை சாவடியில் கௌரி சங்கர் தலைமையில் உரிய ஆவணமின்றி காரில் மாதேஸ்வரன் என்பவர் கொண்டு வந்த ₹2,67 லடசம் பறிமுதல் செய்யப்பட்டது.

மல்லிக்கரை பஸ்நிலையத்தில் போதை நாயகி அலுவலர் தலைமையில், நாகியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் இருந்து ₹1.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்தும் அலுவலர் துரையிடம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்படைத்தனர். மொத்தம் ₹5,49,470/- சரிபார்த்து தாசில்தார் வரதராஜன், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் தமிழரசி ஆகியோர் கருவூலத்தில் பணத்தை ஒப்படைத்தனர். கெங்கவல்லி:தலைவாசல் மும்முடி சாலையில், வீரகனூர் பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ₹1.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தெடாவூர் பிரிவு சாலையில் ஆத்தூர் பிரபல பிஸ்கட் கம்பெனியில் வசூல் பணத்தை ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ₹94 ஆயிரம் பறிமுதல் செய்யபட்டது. மொத்தம் ₹5,68,363/- கணக்கிடப்பட்டு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், கேசவன், முருகையன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Attur, Kengavalli ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்