×

மல்லியகரை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை உறுதி

ஆத்தூர், மார்ச்.31: ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சின்னதுரை நேற்று பைத்தூர், தாண்டவராயபுரம், மல்லியக்கரை, சீலியம்பட்டி, ஈச்சம்பட்டி, சொக்கநாதபுரம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  பின்னர் வேட்பாளர் சின்னத்துரை பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் ஊராட்சிகளில் உள்ள அனைத்து பணிகளையும் மேற்கொண்டு முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஊராட்சிகளில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராமல், திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை மேற்கொள்வதற்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தாருங்கள்.

இதனால் மீண்டும் ஊராட்சிகள் அனைத்தும் குட்டி நகரமாக மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் தகுந்தவாறு அரசு வேலை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மல்லியக்கரை பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மல்லியக்கரை ஊராட்சியை தரம் உயர்த்தி பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் கொண்டுவர அயராது பாடுபடுவேன் என்றார். ஆத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செழியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மல்லியக்கரை ராஜா, பார்வதி ராஜா, பைத்தூர் ரவி, பழனிமுத்து, மாவட்ட கவுன்சிலர் வெற்றிவேல் மீனா, வளையமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் வரதராஜன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Attur ,Chinnathurai ,Malliyagarai ,
× RELATED பரனூர், ஆத்தூர் உட்பட 29...