×

அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கிய திமுகவை ஆதரிக்க வேண்டும் மதிவேந்தனை ஆதரித்து ராஜேஸ்குமார் பிரசாரம்

ராசிபுரம், மார்ச் 31:  ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் பகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மூலக்காடு பகுதியில் சின்ராஜ் எம்.பி., திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் முன்னிலையில் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து கட்டனாச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். அப்போது, மதிவேந்தனை ஆதரித்து மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் பேசுகையில், திமுக ஆட்சியின்போது அருந்ததியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக அந்த சமுதாய மக்கள் டாக்டராக, இன்ஜினியராக, ஆசிரியராக உயர்ந்துள்ளனர். எனவே, திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும். சிலிண்டர் விலை குறைக்கப்படும். வெண்ணந்தூர் ஒன்றிய பகுதிகளில் கழிப்பறை, குடிநீர், சாலை மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களிடம் சென்றடைய அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றியடைய செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து புதுப்பாளையம்,கல்லாங்குளம்,தேங்கல்பாளையம்,கீழூர்,குட்லாடம்பட்டி, பல்லவன்நாயக்கன்பட்டி,தொட்டிவலசு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.தொகுதி பொறுப்பாளர் பாலசந்திரன்,வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி,கட்டனாச்சம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கதுரை,யுவராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர் சொக்கலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி சீனிவாசன்,ரவீந்தர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டினர்.

Tags : Rajeskumar ,Mathivendan ,DMK ,Arundhati ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...