×

6 சட்டமன்ற தொகுதியில் 1,861 வாக்குச்சாவடிக்கு தேவையான 35 வகை பொருட்கள் அனுப்பி வைப்பு

நாகை, மார்ச் 31: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,861 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 35 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. இதை கலெக்டர் பிரவீன்பிநாயர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,861 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான தேர்தல் ஆணைய படிவங்கள், உரைகள், தீப்பெட்டி, மெழுகுவத்தி, எழுது பொருட்கள் உள்ளிட்ட 35 வகையான பொருட்கள் பிரித்து அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. அங்கிருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முன்தினம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இந்த பொருட்களும் வாக்குப்பதிவு நடைபெறும் மையத்திற்கு சென்றடையும் என்றார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ