×

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவேன்: மா.சுப்பிரமணியன் வாக்குறுதி

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை 172வது  வார்டுக்கு உட்பட்ட கோட்டூர்புரம் விநாயகர் கோயில் பகுதி, எச் பிளாக், சித்ரா நகர் 1வது தெரு, நாகாத்தம்மன் கோயில் பின்புறம் உள்ள கல்நார் வீடுகள், 1 முதல் 195 வரை வாம்வே குடியிருப்புகள், ஜி பிளாக், ஏ, பி, சி, டி பிளாக்குகள், வீடுகள், பள்ளிவாசல், சர்ச் மற்றும்  வாட்டர் டேங்க் காலனி பிறகு, எச் பிளாக்,  அனைத்து மாடி குடியிருப்புகள், இ.டபிள்யூ.எஸ் குடியிருப்புகள், கோட்டூர் சூர்யா நகர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோட்டூர் அறிஞர் அண்ணா தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, காவல் குடியிருப்பு நாயுடு தெரு, யாதவாள் தெரு, மண்ணப்ப தெரு, கோட்டூர் மார்க்கெட், துலுக்காணத்தம்மன் கோயில் தெரு, புது தெரு,

திருவள்ளுவர் தெரு 1, 2, 3, 4, கலைஞர் தெரு 1, 2, 3, 4, அண்ணா பல்கலைக்கழக குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
  அப்போது, 172வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் செய்த மேம்பாட்டு பணிகளை பட்டியலிட்டும், மீண்டும் என்னை வெற்றி பெற செய்தால், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவேன் என்றும் வாக்கு சேகரித்தார். திமுக பகுதி செயலாளர் இரா.துரைராஜ், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.குணசேகரன், விசிக ஜேக்கப், மதிமுக சுப்பிரமணி, தமிழ்தாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Subramaniam ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்