×

எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜான்பாண்டியன் வாக்கு சேகரிப்பு

சென்னை: எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன், நேற்று காலை 107வது வார்டில்  உள்ள வேம்புலியம்மன் குடியிருப்பு, வெங்கடாசலபதி 1, 2, 3 தெருக்கள், கந்தன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, அப்பாராவ் தோட்டம், அவ்வைபுரம், ஜோதியம்மாள் நகர், முத்தியப்பன் தெரு, அருணச்சாலம் 1, 2, 3 தெருக்கள், முருகேசன் தெரு, வைத்தியநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து மாலையில், சிட்டிபாபு விநாயகர் கோயில், தனம்பாள் தெரு, மங்களபுரம் 1 முதல் 14வது தெரு, பள்ளிக்கூட சாலை,  முத்துமாரியம்மன் கோயில் ஏ, பி பிளாக், எம்.எஸ்.நகர், பிருந்தாவனம் தெரு, ராஜம்பாள் தெரு, வி.ஆர்.ஆர் காலனி, ஐயா தெரு, புதுகாலனி, சீனிவாசன் தெரு, பள்ளிசாலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடை வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான அனைவருக்கும் வீடு, பேருந்தில் பயணிக்கும் மகளிருக்கு சலுகைகள், விலையில்லா 6 சிலிண்டர்கள், சூரிய சக்தி சமையல் அடுப்பு, வாஷிங்மிஷன் உள்ளிட்டவற்றை அதிமுக வெற்றி பெற்றவுடன் தொகுதி மக்களுக்கு பெற்று தருவேன்,’ என்றார். செல்லும் வழியெங்கும் மக்கள் அவருக்கு மலர் தூவி, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வாழ்த்தினர்.

Tags : Janpandian ,Egmore Assembly ,
× RELATED அதிமுக திட்டங்கள் நிறைவேற்றப்படும்: ஜான்பாண்டியன் வாக்குசேகரிப்பு