×

உடுமலை காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு தீவிர பிரசாரம்

உடுமலை, மார்ச் 30: உடுமலை காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். உடுமலை தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு நேற்று பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். சோளபாளையம், கொள்ளுப்பாளையம், ஏரிபட்டி, மரம்புடுங்கி கவுண்டனூர், போளி கவுண்டனூர், கெரல்லப்பட்டி, காளியாபுரம், கணக்கம்பட்டி, கள்ளிப்பட்டி, கருமாபுரம்,  கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஜோத்தம்பட்டி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று வாக்குசேகரித்தார். அவருடன் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.பிரசாரத்தில் வேட்பாளர் தென்னரசு பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்து கோயில்களுக்கு சுற்றுலா செல்ல ஒரு லட்சம் பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும். அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர் மருத்துவம் வழங்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும். கூட்டுறவு வங்கியில் பெற்ற 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இல்லத்தரசிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். எனவே, வாக்காளர்கள் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும், என்றார்.

Tags : Udumalai ,Congress ,
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...