×

‘நான் மண்ணின் மைந்தன்’ மயூரா ஜெயக்குமார் பிரசாரம்

கோவை, மார்ச் 30:  கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர், தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று செட்டிவீதியில் தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். இதையடுத்து, அசோக்நகர், சேத்துமா வாய்க்கால், சாமியார் புதுவீதி, காட்டேரி செட்டியார் தோட்டம், சாவித்ரி நகர், காமட்சிநகர், ஐயப்ப நகர், பாலாஜி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், செட்டி வீதியில் இளநீர் கடையில் இளநீர் வெட்டி வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது: சமையல் எரிவாயு விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனை குறைக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழைகளின் மீது தொடர்ந்து சுமையை அதிகரித்து வருகின்றனர். நடிகர் ஒருவர் இங்கு பிரசாரம் செய்கிறார். அவரை இதற்கு பின் பார்க்க முடியாது. பாஜ வேட்பாளர் டெல்லி சென்று விடுவார். நான் தான் இந்த மண்ணின் மைந்தன். என்னை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான் என் வீடு உள்ளது. என்னை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். விரைந்து வருவேன். இப்பகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தப்படும். எனவே, கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், திமுக தொகுதி பொறுப்பாளர் நாச்சிமுத்து, மார்க்கெட் மனோகரன், சோமு, தங்கவேலு, சந்தர், ராமநாகராஜ், சீனிவாசன், ஜெயகோபால், சர்க்கிள் தலைவர் ஜேம்ஸ் குமார், நாராயணன், முருகன், மூர்த்தி, ரவிக்குமார், சிவாஜி வரதன், ஆறுமுகம், கராத்தே ராஜேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags : Mayura ,Jayakumar ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...