×

‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ வார்த்தைகளை நினைவு கூர்ந்து அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு

பெருந்துறை, மார்ச் 30: பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜே.கே என்கின்ற ஜெயக்குமார் தொகுதி முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை பெருந்துறை வேட்பாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, பொன்னுதுரை, முன்னாள் சேர்மேன் கே.கே.பழனிசாமி, பெரியசாமி ஒன்றிய செயலாளர்கள் விஜயன் (எ) ராமசாமி, ரவிச்சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகளுடன் பெருந்துறை தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். கிராமப்புற பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கள்ளியம்புதூர் கிராமப்பகுதியில் வாக்கு சேகரித்த அவர் அங்கு நடைபெற்று கொண்டிருந்த கோயில் விழாவில் கலந்துகொண்டு சாமி வழிபாட்டிற்கான விருத்த பாடல்களைப் பாடி கம்பத்தை சுற்றி ஆடி வந்தார். கைகோலபாளையம் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர் அப்பகுதியில் காமாட்சியம்மன் கோயிலில் நடந்த விளையாட்டு போட்டியில் இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று கலந்து கொண்டார். அதில் கண்ணைக் கட்டிக்கொண்டு பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஜெயக்குமார் அதில் வெற்றி

இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது: ‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்று தமிழக மக்களுக்காக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி இப்பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். இப்பகுதிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்டம், புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், குடிமராத்து திட்டம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு தள்ளுபடி, மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள கல்விக் கடன் தள்ளுபடி, வருடம் 6 காஸ் சிலிண்டர் இலவசம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, முதியோர் உதவித்தொகை ரூ.1500, இலவச அரசு கேபிள், வாஷிங் மெசின் இலவசம், கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா போன்ற திட்டங்களை நிறைவேற்ற அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடன் கட்சி தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் பலர் இருந்தனர்.

Tags : AIADMK ,Jayakumar ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...