×

கெங்கவல்லியில் காரில் எடுத்து வந்த ₹61,500 பறிமுதல்

கெங்கவல்லி, மார்ச் 30: கெங்கவல்லி அடுத்த தலைவாசல், நத்தகரை டோல்கேட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையில், எஸ்.எஸ்.ஐ ராமசாமி குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, ₹61,500 பணம் இருந்தது. இதுகுறித்து காரில் வந்த சேலம் புதுரோடு காந்திநகரைச் சேர்ந்த மகேந்திரன்(30) என்பவரிடம் விசாரித்த போது, அவர் சிதம்பரத்தில் செப்டிக் டேங்க் வாங்க சென்றதாகவும், அதை வாங்காமல் மீண்டும் பணத்தை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், உரிய ஆவணம் இல்லாததால், பிடிஓ சந்திரசேகர் பணத்தை பறிமுதல் செய்து, கெங்கவல்லி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தார். உரிய ஆவணத்தை காண்பித்து, பணத்தை பெற்றுச் செல்லும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்