×

கெலமங்கலம் அருகே பணத்தை திருப்பி கேட்ட டிரைவருக்கு சரமாரி அடி

கிருஷ்ணகிரி, மார்ச் 30: கெலமங்கலம் அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேன் டிரைவரை சரிமாரியாக தாக்கிய தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். கெலமங்கலம் கணேசா காலனியைச் சேர்ந்தவர் சரவணன்(31). வேன் டிரைவரான, இவரிடம் அதே பதியில் உள்ள துளசி நகரைச் சேர்ந்த தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரியும் நந்தீஸ்குமார்(28) என்பவர், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ₹40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். ஆனால், பலமுறை கேட்டும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், சரவணன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்க மறுத்ததுடன், ஆபாச வார்த்தையால் பேசி, அங்கிருந்த மரக்கட்டையால் நந்தீஸ்குமார் மற்றும் அவரது நண்பரான அண்ணா நகரைச் சேர்ந்த அஜீத்(25) ஆகியோர் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சரவணன், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கெலமங்கலம் போலீஸ் எஸ்.ஐ பார்த்தீபன் வழக்குப்பதிந்து, நந்தீஸ்குமாரை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள அஜீத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Kelamangalam ,
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்