×

போச்சம்பள்ளியில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்


போச்சம்பள்ளி, மார்ச் 30: போச்சம்பள்ளி அருகே செல்லம்பட்டி கூட்டு ரோடு பகுதியிலிருந்து, நெடுங்கல் செல்லும் மெயின் சாலையில் அமைந்துள்ள நாயக்கன்கொட்டாய் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தினசரி ஏராளமான வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கின்றன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். அப்பகுதி மக்களுக்கு மின்வினியோகத்திற்காக, மெயின் ரோட்டில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பின்மையால் மின் கம்பம் சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் கீழே விழுக்கூடிய நிலையில் உள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சிதிலமடைந்து காணப்படும் மின்கம்பம் குறித்து, பலமுறை மின்வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு போய் விட்டோம். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளது. தென்னை மட்டைகள் மின் கம்பத்தின் மீது விழுந்தாலோ, அல்லது பலத்த காற்றடித்தாலோ எப்போது வேண்டுமாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, உயிர் பலிக்கு காத்திருக்கும் மின்கம்பத்தை உடனடியாக அப்பறப்படுத்தி, புதிய மின்கம்பம் நட ஏற்பாடு செய்ய வேண்டும்,’ என்றனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...