×

பென்னாகரத்தில் ₹2.31லட்சம் நகை, பணம் பறிமுதல்

பென்னாகரம், மார்ச் 30:  பென்னாகரம் அருகே உரிய ஆவணம் இல்லாத எடுத்து செல்லப்பட்ட 5 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ₹50ஆயிரம் என ₹2.31லட்சம் மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியில், வேளாண்மை துறை உதவி இயக்குனர் தாம்சன் மற்றும் சிறப்பு டிஎஸ்பி பெரியண்ணன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஏரியூர் - பென்னாகரம் செல்லும் சாலையில், கடை வீதியில் வந்து கொண்டிருந்த காரை நிறுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி அருகே பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த மலையன் மகன் பழனிச்சாமி(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது காரை சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணம் இல்லாமல் நகை மற்றும் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 5பவுன் நகை, வெள்ளி கொலுசு, ₹50ஆயிரம் பணத்தை என ₹2.31லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணம் ஆகியவற்றை, பென்னாகரம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Pennagaram ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...