தர்மபுரி, மார்ச் 30: விழுப்புரம் மாவட்டம் பள்ளச்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (47), கூலி தொழிலாளி. இவர் சேலத்தில் இருந்து ரயில்வே தளவாட பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டு, தர்மபுரி புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தார். இங்கு பொருட்களை கீழே இறக்கும் பணியில் சிவராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பொருட்கள் சரிந்து சிவராஜ் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த சிவராஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.