×

ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் சூறாவளி பிரசாரம்


ராஜபாளையம், மார்ச் 30: ராஜபாளையம் தொகுதி திமுக ேவட்பாளர் தங்கப்பாண்டியம் எம்எல்ஏ 34 வது வார்டு பச்சமடம் சாவடி, மாரியம்மன் கோயில் தெரு, பெரியார் சிலை, சங்கரங்கோவில் ரோடு, 40வது வார்டு கணபதியாபுரம் வரை வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த மண்ணின் மைந்தனான எனக்கு வாக்களியுங்கள். ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத்திட்டம் ரயில்வே மேம்பாலத்திட்டம் கொண்டு வந்த பெருமை திமுகவைத்தான் சாரும். இத்திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளும், தெருக்களும் திமுக ஆட்சி அமைந்தவுடன் போர்க்கால நடவடிக்கையில் சீரமைக்கப்படும்.

ராஜபாளையத்தை சேர்ந்த அதிமுகவின் பாரம்பரியமான கட்சிக்காரர்களை புறக்கணித்து விட்டு வேறு பகுதியைச் சேர்ந்தவரை அதிமுகவின் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். அவர் மாவட்டத்தில் உள்ள சொந்த கட்சிக்கார்களையே மதிப்பது இல்லை. பின் எப்படி பொதுமக்களை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார்? பொதுமக்கள் கோரிக்கை வைத்தால் மிரட்டல் மட்டுமே அவரிடமிருந்து வரும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராசா அருண்மொழி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் ஷியாம்ராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துசெல்வி, வார்டு செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Rajapalayam constituency ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி